search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரத்தில் மழை"

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம்:

    தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதையடுத்து விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோகைப்பாடி, நன்னாடு, வழுதரெட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து லேசாக மழை தூரிக்கொண்டிருந்தது. இரவு 9.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    2 மணி நேரம் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இன்று காலையும் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், அரசூர், மயிலம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்யத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை தொடர்ந்து தூரிக்கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்தமழை சிறிது நேரம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும் வாகனங்களை ஓட்டிசென்றனர். தொடர்ந்து மழை லேசாக விட்டு விட்டு தூரிக்கொண்டே இருந்தது.

    பெண்ணாடம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து லேசாக மழை பெய்தது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதைத்தொடர்ந்து மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள பெண்ணாடம் கடை வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான அம்புஜ வல்லி பேட்டை, கள்ளிப்பாடி, காவனூர், எசனூர், வெங்கடசமுத்திரம், நகரபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    1 மணிநேரம் பெய்த மழையினால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டர்) பின்வருமாறு:-

    சிதம்பரம்-35, கொத்தவாச்சேரி-32, அண்ணாமலைநகர்-31, சேத்தியாத்தோப்பு-30, புவனகிரி-27, ஸ்ரீமுஷ்ணம்-23.40, பரங்கிப்பேட்டை-23, காட்டு மன்னார் கோவில்-22, வடக்குத்து-19, குறிஞ்சிப்பாடி-15, கடலூர்-15.80, லால்பேட்டை-13.80, கீழ்செறுவாய்-13, வேப்பூர்-11, தொழுதூர்-7, விருத்தாசலம்-5.30, பண்ருட்டி-3.

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மயிலத்தில் 50 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரத்தில் மழை பெய்தது. இந்த மழை 6.20 மணி வரை நீடித்தது. அதன்பிறகு இரவு 12 மணி அளவில் இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது.

    இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, குணமங்கலம், வெளியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.

    தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அடித்த சூறாவளி காற்றால் மயிலம், ரெட்டணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் பல மரங்கள் மேலே சென்ற மின்வயர்கள் மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வயர்கள் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்ததால் இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை. விடிய விடிய மின்தடை நீடித்தது. இன்று காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை. இரவில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் முதியவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    திருவெண்ணைநல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தன. தற்போது பெய்த இந்த மழையால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எலவ னாசூர் கோட்டை, மடப்பட்டு, களமருதூர், காட்டு நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இடை விடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் கடலூரிலும் நேற்று மாலை 6 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணியில் இருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணி வரை இந்த மழை நீடித்தது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    வீராணம் ஏரி மற்று அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமாலை லேசான மழை பெய்தது. இன்று காலை ஏரியின் நீர் மட்டம் 46.80 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 256 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் சென்னை குடி நீருக்காக 74 கனஅடி தண்ணீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. 

    ×